Saturday 31 October 2015

Do you have to pay additional tax in the US?

கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்தி கணேசன் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஆர்டர் மேனேஜ்மென்ட்  தலைவர் (Order Management Head) ஆக பணி புரிந்து வந்தார். 
சிங்கப்பூர், துபாய், குவைத் என்று உலகமெல்லாம் பறந்து வந்தவர் பன்னாட்டு நடைமுறைகள், போட்டி மனப்பான்மை, புது தொழில்நுட்பங்களை தழுவிக்கொள்ளும் வேகம் ஆகியவற்றை பார்த்து வியந்து போனார். ஏற்கனவே படு சூட்டிப்பாக துறுதுறுவென சொன்னதையெல்லாம் புரிந்து  கொள்ளும் தன் 6 வயது மகன் ப்ரணவ் இதையெல்லம் பார்த்து வளர்ந்தால் மேலும் மெருகேறிவிடுவான் என்று முழுமையாக நம்பினார்.

தானும் அமெரிக்காவில் இடமாற்றம் பெற்றுக்கொண்டு அங்கேயே செட்டில ஆகிவிடலாம் என்றதும், எங்கிருந்தாலும் மற்ற எதை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம், தமிழ் கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும் இங்கு இருந்தால்தான் தன் மகன் கற்க முடியும் என்று போர்க் கொடி உயர்த்தினார் அவர் மனைவி நீரஜா. சரி ஒரிரு வருடங்கள் மட்டும் அங்கே இருந்து அவன் படிக்கட்டும் பிறகு திரும்ப வந்துவிடலாம் என்று கார்த்தி வெள்ளைக்கொடியைப் பறக்க விட்டதும் போர் ஓய்ந்த்து. 
மூவரும் அமெரிக்கா கிளம்ப ஆயத்தமாயினர். அரிசோனா மாகாணத்தில் இருக்கும் சிறந்த பள்ளியில் மகனை சேர்த்தார். அவருக்கு எஸ்எஸ்என் (SSN) கிடைத்துவிட்டது. மனைவிக்கும் மகனுக்கும் ஐஐஐபி டிபென்டென்ட் விசா (H1B Dependent VISA) இருந்ததால் எஸ்எஸ்என் பெற முடியவில்லை. மனைவி வேலைக்குச் செல்லாததாலும், மகன் பள்ளிக்குச் செல்ல ஐஐஐபி மட்டும் போதுமென்பதாலும் அதை பற்றி அவர் கவலைப்படவில்லை.

ஒரு வருடம் சென்றதே தெரியாமல் அழகாக கடந்து போனது. டாக்டர் மனைவி ஒரு முக்கிய பயிற்சிக்காக 2 மாதம் இந்தியா சென்றுவிட்டார்.  வரிப்படிவங்களை சமர்பிக்க தன் கம்பெனியின் சிபிஏ (CPA) -ஐ அணுகினார். அவர் அமெரிக்காவில் வரிப்படிவங்களில் வரிதாரின் மனைவியடன் (அவருக்கு வருமானம் இல்லாத பட்சத்திலும்) இணைந்து வரித்தாக்கல் செய்யும் சாத்தியம் உள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் தன்னைச் சார்த்து இருப்பவர்களையும் வரிப்படிவங்களில் குறிப்பிடலாம்.

அதற்காக குறிப்பிட்டத் தொகையை வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ள முடியும். இது அனைத்தும் வரிதாரர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுவோர் அமெரிக்காவில் ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள வரி ஆண்டில் குறைந்தது 183 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். வரிதாரரின் துணைவருக்கு 183 நாட்கள் இருக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. அவரை குடியாளராக கருத ஒரு உறுதி ஆவணம் சமர்பித்தால் போதுமானது. ஆனால் அவர் வேறு நாடுகளில் வரிக்குட்படுத்தப்படும் போது அவ்விரு நாடுகளின் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை பொருத்து இந்த விதி வேறுபடும்.

வரிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இருவருக்கும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் (Social Security Number) அல்லது தனி நபர் வரி குறிப்பீட்டு எண்- (ஐடிஐஎன் - Individual Taxpayer Identification Number ITIN) கட்டாயமாக இருக்க வேண்டும். இரண்டுமே இல்லாதபட்சத்தில் வரிப்படிவத்தோடு ஐடிஐஎன் விண்ணப்பத்தையும் உடன் அனுப்ப வேண்டும் என்றார். வரிதாரரைச் சார்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுவோருக்கும் ஐடிஐஎன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஐடிஐஎன் என்றால் என்ன ?

ஐடிஐஎன் என்பது அமெரிக்காவின் வரித் துறை (Internal Revenue Service) வழங்கும் ஒரு 9 இலக்க வரிதாரர் அடையாள எண்ணாகும். வரித்தாக்கலைத் தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் ஐடிஐஎன் ஒரு அடையாள எண்ணாகப் பயன்படாது. எஸ்எஸ்என் வாங்க தகுதி பெறாத ஆனால் வரித்தாக்கல் செய்ய தேவைப்படும் அனைவருக்கும் அவருடைய குடிவரவு அந்தஸ்த்தைக் கணக்கில் கொள்ளாமல் ஐடிஐஎன் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

ஐடிஐஎன் விண்ணப்பம் டபிள்யூ -7 (W-7) என்ற படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படுகிறது. டபிள்யூ -7 படிவத்தில் விண்ணப்பதாரரின் அடையாளங்களாக சமர்பிக்கப்படும் ஆவணங்களின் எண்களும், வரிதாரரின் எஸ்எஸ்என் எண்ணும், அவருக்கும் விண்ணப்பதார்ருக்கும் உள்ள தொடர்பு போன்ற விவரங்கள் இருக்கும். விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை வரிப்படிவங்களுடன் இணைத்து, ஆவணச் சான்றுகளுடன் ஐஆர் எஸ் (IRS) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரில் சென்றோ சமர்பிக்கலாம். ஒப்புக்கொள்ளப்படும் ஆவணங்களில் பாஸ்போர்ட் மட்டுமே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துவிடும்.

மற்ற ஆவணங்கள் குடிவரவு அந்தஸ்த்து அல்லது அடையாளம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்ய மட்டுமே பயன்படும். அவ்வாறு 13 ஆவணங்கள் உள்ளன. அனைத்து ஆவணங்களும் அசலாகவோ அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களாகவோ மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும்.  

பொதுவாக, அமெரிக்காவின் வரித் துறை ஐடிஐஎன் விண்ணப்பங்களை அங்கீகரிக்க 4 முதல் 6 வாரங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. ஐடிஐஎன் உறுதியான பின்னர் தான் வரிப்படிவங்கள் மதிப்பீடு செய்யப்படும்.                   
இதனைக் கேட்டறிந்த கார்த்தி தன் மனைவி ஐடிஐஎன் விண்ணப்பிக்க அசல் ஆவணங்களை இந்தியாவிலிருந்து அனுப்பிவைப்பது பாதுகாப்பானது இல்லையே என்று கவலைக் கொண்டார். ஆனால் அவருடைய சிபிஏ (CPA), ஐடிஐஎன் விண்ணப்பங்களை சரிபார்த்து ஆவணங்களை உறுதி செய்ய அக்செப்டன்ஸ் ஏஜென்ட்ஸ் (Acceptance Agents) இந்தியாவிலேயே இருப்பதாகக் கூறினார். அக்செப்டன்ஸ் ஏஜென்ட்ஸ் என்பவர்கள் ஐஆர்எஸ் (IRS) ஆல் அனுமதிக்கப்பட்ட முகவர்கள். ஆவணங்களை சரிபார்த்து
சர்டிஃபிகேட் ஆஃப் அக்கூரசி (Certificate of Accuracy) என்ற படிவத்தை ஐஆர்எஸ் (IRS) க்கு அனுப்பி வைப்பர். அதை ஆதாரமாகக் கொண்டு ஐடிஐஎன் அங்கீகரிக்கப்படும் என்றதும் சற்று நிம்மதி கொண்டு வரித்தாக்கல் செய்யும் வேலையில் இறங்கினார்.

 (இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். )      

Tuesday 27 October 2015

Do you want to stay for long in the US?

திருச்சி பழூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் சென்னையில் ஒரு மிகப் பெரிய கப்பல் கம்பெனியின் கணக்குத் துறையில் நல்ல நிலையில் பணிபுரிந்து வருகிறார். எந்த ஒரு கேள்விக்கும் தெளிவாக பதிலளிப்பார். சாப்பாட்டு பிரியரான அவர்  அனைவரையும் பெயர் தெரியாத பல ருசியான உணவகங்களுக்கு கூட்டிச் செல்வார். கிண்டலும் கேலியுமாக தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் வேலையையும் தேன் உறியும் வண்டு போல் வாங்கிக் கொள்வார். அவருக்கடியில் பணிபுரிவதே ஒரு ஜாலியான அனுபவம் என்பது அலுவலகமே அறிந்த செய்தி.

அவருக்கு கீழ் பணிபுரிபவர்கள் அவரை “கே.கே.” என்று செல்லமாக அழைத்தனர். ஒரு வேலை பயிற்சிக்காக அமெரிக்காவிலிருந்து பயிற்சியாளர்கள் வந்தனர். அங்கே அவர் நுண்ணறிவையும் நிர்வாகத் திறனையும் கண்டு வியந்த அமெரிக்காவின் மூத்த மேலாளர் அவரை அமெரிக்கவிலேயே பணியமர்த்தக் கோரி ஒரு இமெயிலைத் தட்டினார். இரண்டு வருடத்திற்கு அமெரிக்காவில் பணிபுரிய சென்று பிடித்திருந்தால் அங்கேயே தொடரும் வாய்ப்பு கொடுத்ததும் சரி என்று தலையசைத்தார் கே.கே. 
புதிய விஷயங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே உள்ள அவர் வரி சம்பந்தமான விஷயங்களை முதலில் அறிந்து கொள்ள விரும்பினார். தன் சிஏ மனைவி ராதிகாவிடம் அடிப்படையான சில தகவல்களை தெரிந்து கொண்டார். அதாவது, அமெரிக்காவில் இந்தியாவைப் போல் இல்லாமல் கணவன் மனைவி இணைந்து வரி தாக்கல் செய்யும் வசதி உள்ளது. அதாவது வரிதாரரின் விருப்பப்படி தனியாகவோ அல்லது துணைவருடன் இணைந்தோ (துணைவருக்கு வருமானம் இல்லாவிட்டலும்) வரி தாக்கல் செய்யலாம்.  வரிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இருவருக்கும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் (எஸ்எஸ்என் SSN - Social Security Number) அல்லது இன்டிவியூவல் டேக்ஸ்பேயர் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் (Individual Taxpayer Identification Number (ITIN)) கட்டாயமாக இருக்க வேண்டும். ITIN இல்லாதபட்சத்தில் வரிப்படிவத்தோடு ITIN விண்ணப்பத்தையும் உடன் அனுப்ப வேண்டும் என்றார். சோசியல் செக்யூரிட்டி நம்பர்-ஐப் பற்றி ஒரு அளவுக்கு தெரிந்து வைத்திருந்தார் கே.கே ஆனால் அதை எப்படிப் பெருவது, முழுமையாக அதன் நடைமுறை என்ன என்பது பற்றி எல்லாம் விசாரித்தார்.  
  
சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்றால் என்ன?

சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்பது அமெரிக்காவில் ஒரு நபரை அடையாளம் காண பயன்படுத்தப்படும் ஒரு ஒன்பது இலக்க எண். ஆரம்பத்தில் ஒரு நபரை அடையாளம் கண்டு சமூக பாதுகாப்பு வரி வரம்புக்குள் அவரை கொண்டு வரும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது என்றாலும், அதன் பயன்பாடு இப்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சோசியல் செக்யூரிட்டி நம்பர் வகைகள்

சோசியல் செக்யூரிட்டி ஏஜென்சி (SSA) எனப்படும் அரசாங்க நிறுவனமே இந்த எண்களை வெளியிடுகிறது. சமூக பாதுகாப்பு அட்டைகள் மூன்று வெவ்வேறு வகையாக வழங்கப்படுகிறது. மிகவும் பொதுவான வகை, அட்டை வைத்திருப்பவரின் பெயர் மற்றும் எண் கொண்டு வரும். இத்தகைய அட்டைகள் அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டது போக சமூக பாதுகாப்பு அட்டைகள் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட வகையில் உள்ளன:

1) “வேலைவாய்ப்பு செல்லுபடியாகாது” (Not Valid For Employment )என்ற வார்த்தைகளை கொண்டு வரும் இத்தகைய சோசியல் செக்யூரிட்டி நம்பர் அட்டைகள் வைத்திருக்கும் நபர் அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகாரம் இல்லை எனக் குறிப்பிடுபவை.

2) Valid for work only with DHS authorization - இத்தகைய சோசியல் செக்யூரிட்டி நம்பர் அட்டைகள் வைத்திருக்கும் நபர் அமெரிக்காவில் பணிபுரிய ஹோம்லேன்ட் செக்யூரிட்டி துறை (Department of Homeland Security) துறையினர் அங்கீகாரத்துடன் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். இந்த அட்டைகள் அமெரிக்க தற்காலிகப் பணி அங்கீகாரம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படுகின்றன. 

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பொதுவாக அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகாரம் பெற்ற நபர்கள் மட்டுமே எஸ்எஸ்என் பெற விண்ணப்பிக்க முடியும். https://www.ssa.gov/forms/ss-5.pdf என்ற இணையதள இணைப்பில் SSN-கான விண்ணப்பம் உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Social security Officeல் சமர்பிக்க வேண்டும் அல்லது தபால் அனுப்ப வேண்டும். https://secure.ssa.gov/apps6z/FOLO/fo001.jsp என்ற இணையதள இணைப்பில் எந்த அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தோடு குறிப்பிட்ட சில ஆவணங்களையும் இணைக்க வேண்டும். குடிவரவு அந்தஸ்து, வயது, அடையாளம் மற்றும் வேலைத்தகுதிக்கான அசல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

1) குடிவரவு அந்தஸ்து மற்றும் அடையாளத்திற்கு ஆதாரமாக ஒப்புக்கொள்ளப்படுவன:
a)    Form I-551(Immigrant VISA) மற்றும் பாஸ்போர்ட் (அல்லது)
b)    I- 766 எனப்படும் Work permit (ஆல்லது)
c)    I-94 எனப்படும் வரவு மற்றும் வெளியேற்றத்தின் பதிவு
2) வயதிற்கான அதாரமாக ஒப்புக்கொள்ளப்படுவன:
a)    பிறப்புச் சான்றிதழ்
b)    பாஸ்போர்ட்
c)    DHS கொடுத்த சான்றிதழ்

12 வயதிற்கு மேல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் நேர்முகத்தேர்விற்குப் பின்னர் தான் SSN வழங்கப்படும். பொதுவாக ஒரே நாளில் எஸ்எஸ்என் அங்கீகரிக்கப்பட்டுவிடும். 2 வாரங்களில் அசல் எஸ்எஸ்என் அட்டை வழங்கப்படும்.

“பரவாயில்லையே! இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே!” என்று மனைவியை சீண்டினார். ITINஐ பற்றி அடுத்த இதழில் காண்போம்.

http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=11062

Wednesday 21 October 2015

Can indian resident family members of an NRI pay out loan taken in India?

சத்யநாராயணன் ஈரோட்டைச் சேர்ந்த சிறந்த வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். வாழையடி வாழையாய் வக்கீல் தொழில் செய்யும் வீட்டு பெரியவர்களை பார்த்து வளர்ந்ததால் சிறு வயது முதலே கருப்புக் கோட்டின் மீது மோகம் கொண்டார். படிப்பில் படு கெட்டியாக இருந்தவர் தன் வீட்டு வரவேற்பு அறையின் சுவர் முழுவதும் சான்றிதழும், மடல்களுமாக அடுக்கி வைத்திருந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் LSATல் நல்ல மதிப்பெண் பெற்று மேற்படிப்புக்காக காலிபோனியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். குடும்பத்தில் அனைவருக்கும் சந்தோஷம் மடை கடந்தோடியது. ஸ்டான்போர்டின் பிரம்மாண்டமும் அங்கு படிக்க வரும் மாணவர்களின் சூட்டிப்பும் சத்யாவை மலைக்க வைத்தது. எப்படியாவது நன்கு படித்து தேர்ந்து விட வேண்டும் என்ற முனைப்போடு படித்துத் தேர்ச்சி பெற்றார். 
இந்தியா திரும்ப வந்த அவர் குடும்ப நண்பர் மூலம் வக்கீல் ஒருவரை சந்திக்க நேர்ந்த்து. நாளடைவில் அவர் ஒரு சிறந்த நண்பரானார். சத்யாவுடைய  வழிகாட்டியாகவும் நலம் விரும்பியாகவும் இருந்த அவர், படிப்பை இதோடு நிறுத்திவிடாமல் மேலும் படி, ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் மேலும் மூன்று வருடம் படித்தால் அமெரிக்காவின் தலை சிறந்த சட்ட நிறுவனங்களில் சுலபமாக வேலை கிடைக்கும். வாழ்க்கை தரமே வேறு நிலைக்கு போய் விடும் என்றார்.

அவர் கூறும்போதே சத்தாவின் மனத்திரையில் “பீஸ்ட்” காரின் கதவை வேலையாள் திறந்து விட மிடுக்காக தான் இறங்கும் காட்சி ஓடியது. ஹார்வார்டில் மேலே படிக்க குறைந்தது 85,000 டாலர் செலவாகும் என்றதும் சத்யாவிற்கு சற்று யோசனையாக இருந்தது. தன் பெயரில் இந்தியாவிலேயே கடன் எடுத்து விடலாம் என முடிவு செய்தார். என்னதான் படிக்கும் காலத்தில் பகுதி நேர வேலைக்குச் சென்றாலும் அவ்வளவு பெரிய தொகையை தன் பெயரில் கடனாக பெற்று எப்படி திருப்பி அடைப்பது என்று அம்மாவிடம் புலம்பினார். அப்பாவிடமிருந்து அடுத்த நாளே போன் வந்தது. என்னடா புதுசா காசு பணமெல்லாம் பார்க்கிறாய்? ஒரு டிகிரி படித்ததுமே கொம்பு முளைத்துவிட்டதோ? கடனை நான் அடைக்கிறேன். ஒழுங்கா படிக்கும் வேலையை மட்டும் பார்” என்று செல்லமாக கடிந்தார். ஆனால் ஒரு என்ஆர்ஐ வாங்கிய கடனை அவருடைய நெருங்கிய சொந்தங்கள் அடைக்க முடியுமா? அவ்வாறு அடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று வக்கீல் மூளை யோசிக்கத் துவங்கியது. வீடு முழுவதும் அடுக்கி வைத்திருந்த குண்டு குண்டு புத்தகங்களில் ஃபெமா (FEMA) வை எடுத்தார். 
ஒரு என்ஆர்ஐ இந்தியாவில் வாங்கிய கடனை இந்தியாவில்தான் அடைக்க முடியும். தன் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பியோ அல்லது தன் என் ஆர் ஓ கணக்கிலிருந்து நேரடியாகவோ மட்டுமே கடனை அடைக்க முடியும். அதோடு மட்டுமின்றி ஃபெமா விதிகளின்படி ஒரு என்ஆர்ஐ வாங்கிய கடனை அவருடைய இந்திய வாழ் நெருங்கிய சொந்தங்கள் அடைக்க முடியும். அவ்வாறு செய்வதற்கு முதலில் அங்கீகரிக்கப்பட்ட டீலர் வங்கி யார் கடனை அடைக்கப் போகின்றாரோ அவருடைய பெயரை கேரண்டர் (Guarantor)ஆக பதிவு செய்ய வேண்டும். கடனை கேரண்டார் அவருடைய வங்கிக்கணக்கிலிருந்தே திருப்பி செலுத்த முடியும்.

இங்கே நெருங்கிய சொந்தங்கள் என்பதில் கீழ்கண்டவர்கள் மட்டுமே அடங்குவர்.

 •    ஒரே இந்துக் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்
 •    கணவன் மற்றும் மனைவி
 •    பெற்றோர்
 •    பிள்ளைகள் 
 •    மருமகன் மற்றும் மருமகள்
 •    சகோதர சதோதரியர் மற்றும் அவர்களுடைய துணைவியர் 
 •    தாத்தா மற்றும் பாட்டி
 •    பேரன் மற்றும் பேத்தி 

ஒரு என்ஆர்ஐ இந்தியாவில் வாங்கிய கடனை இந்திய வாழ் நபர் அடைக்க மற்றொரு வழி, என்ஆர்ஐ இந்தியாவில் வைத்திருக்கும் என்ஆர்ஓ கணக்கை உபயோகிக்கும் உரிமையை தன் நெருங்கிய சொந்தங்களுக்கு அளிக்க முடியும். அதற்கான “மான்டேட்” விண்ணப்பத்தை வங்கியில் கொடுத்தால் போதுமானது. அவ்வாறு செய்தால் அந்நபர் என்ஆர்ஓ வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கவோ செலுத்தவோ முடியும்.

இதனை தெரிந்துகொண்ட சத்யா மன நிம்மதியுடன் ஹார்வார்டு பல்கலைகழகத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய  துவங்கினார். விண்ணப்பத்தை முடிக்கவே ஒரு நாள் முழுவதும் எடுத்தது. ஆனால் தன் வாழ்வை மாற்றப் போகும் முக்கியமான அடியை எடுத்து வைக்கும் ஆவலும் உற்சாகமும் நிறைந்திருந்ததால் நேரம் கடந்ததே தெரியாமல் தன் எதிர்காலத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

( இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். )      

Friday 16 October 2015

How much can you spend on medical expenses abroad?

சங்கரமணி இந்தியாவின் பிரபலமான மருந்துக் கம்பெனியின் துணைத்  தலைவராக பணிபுரிபவர். கம்பீரமான தோற்றமும், கண்ணியமான பேச்சும், வாய் நிறைய சிரிப்பும் என பார்த்த்தும் ஈர்க்கும் குணமுடையவர். தனது கடின உழைப்பின் மூலம் தன் கம்பெனியின் உச்சிக்கு வந்தவர்.

பல ஆண்டுகளாக அவருடன் தங்கிவந்த அவருடைய அம்மாவிற்கு திடீரென “கேன்சர்” நோய் இருப்பதாக கண்டறிந்த டாக்டர் குழு அந்த நோய் சற்று முற்றிய நிலையில் இருப்பதாகவும் சங்கரமணியிடம் கூறினர். மருந்துக் கம்பெனியின் மூத்த பதவியில் இருந்ததால் உடனடியாக பெங்களூரில் உள்ள தலை சிறந்த டாக்டரிடம் காண்பிக்க முடிந்தது. நல்ல சிகிச்சை சில மாதங்கள் கொடுத்தாலும் நோயின் தீவிரத் தன்மை குறையாததால் சில டாக்டர்கள் அமெரிக்காவில் இதற்கு சிறப்பு சிகிச்சை இருப்பதாகக் கூறினர்.

ஆனால், அதற்கான செலவும் அதிகம் என்பதை தெரிவித்தனர். உடனடியாக அமெரிக்கா செல்ல வசதியும் மனமும் இருந்தாலும், இதற்கான செலவை வெளிநாட்டில் செய்வதற்கான வரி மற்றும் இதர அனுமதிகள் குறித்த கேள்விகள் சங்கரமணியின் மனதில் எழுந்தன..

வெளிநாட்டில் ஒரு இந்தியக் குடிமகன் எவ்வளவு மருத்துவச் செலவு செய்யலாம்? 
ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட முறையில் (LRS), ஒரு நிதி ஆண்டில் மருத்துவச் செலவுக்காக ஒரு தனி நபர் 2,50,000 டாலர் வரை செலவு செய்ய முடியும்.  நோயாளியுடன் செல்லும் உதவியாளரும் ஒரு நிதி ஆண்டில் 2,50,000 டாலர் செலவுக்காக எடுத்துச் செல்ல முடியும்.

தீர விசாரித்துப் பார்த்த்தில், தாயின் மொத்த மருத்துவ செலவு 6,00,000 டாலருக்கு மேல் ஆகும் என்று தெரிய வந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தில் தன் வங்கியை தொடர்பு கொண்டார் சங்கரமணி. பேங்க் மேனேஜர் முதலில் சங்கரமணியை அமைதிபடுத்தினார். அவர் சற்று சாந்தமடைந்ததும் வங்கியின் நடைமுறைகளை விவரிக்கத் தொடங்கினார்.

    ஒரு அங்கீகரிக்கப்பட்ட டீலர் (authorized dealer) நோயாளி பதிவு செய்த படிவம் 2ஏ (Form A2) வை மட்டும் ஒப்புக்கொண்டு 2,50,000 டாலர் வரை அந்நிய செலாவனியை வெளியீடு செய்ய முடியும். 2,50,000 டாலருக்குள் செலவு இருக்கும்பட்சத்தில் மருத்துவரின் சான்றிதழ் தேவை இல்லை என்றார். 
படிவம் 2ஏ என்றால் என்ன?

    படிவம் 2ஏ என்பது சாதாரண பணம் செலுத்தும் படிவங்களைப் போன்ற மற்றோர் படிவமே. இந்திய ரூபாயை அந்நியச் செலாவணியாக மாற்றிப்பெற இந்தப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அந்நியச் செலாவணிக்காக விண்ணப்பிப்பவரின் விபரம், அவருடைய கணக்கு எண், மாற்றப்பட வேண்டிய நாணயம், மாற்றுவதற்கான காரணம், பணத்தை பெறப்போகும் நபரின் அல்லது நிறுவனத்தின் விபரம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட டீலர்  (authorized dealer) அதை சரிபார்த்து திருப்தி அடைந்த பின் 2,50,000 டாலர் வரை அந்நிய செலாவணியை வெளியீடு செய்வார்.  இந்த பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை இல்லை.

ஆனால் எனக்கு 6,00,000 டாலருக்கு மேல் தேவைப்படுகிறதே. எங்கிருந்து என்ன அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுங்கள். என்னால் இனிமேலும் தாமதிக்க முடியாது என்றார் பொறுமை இழந்த சங்கரமணி. ஒன்றும் பிரச்சனை இல்லை சார். அதற்குத்தான் நாங்கள் இருக்கிறோமே. பெரிய நடைமுறை சிக்கல்களின்றி சுலபமாகவே நீங்கள் கேட்கும் அளவிற்கு அந்நிய செலாவனியை வெளியீடு செய்ய முடியும் என்றார்.

2,50,000 டாலருக்கு மேல் செலவானால் என்ன செய்வது?

    2,50,000 டாலருக்கு மேல் செலவாகுமெனில் படிவம் 2ஏ உடன் அயல்நாட்டில் சிகிச்சை அளிக்கும்  மருத்துவரின் / நிறுவனத்தின் செலவுச்  சான்றிதழும் தேவைப்படும். அதோடு மட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட டீலர் ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெற வேண்டும். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற பின், 2,50,000 டாலருக்கு மேலும் அந்நிய செலாவணியை வெளியீடு செய்ய முடியும். அதாவது விண்ணப்பதாரர் சிகிச்சை செலவுச் சான்றிதழையும், பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 2ஏ படிவத்தையும் மட்டும் வங்கியில் வழங்கினால் போதுமானது.

இதை கேட்டபின்தான் சங்கரமணிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. விரைவாக பணத்திற்கு ஏற்பாடு செய்து தன் அம்மாவுடன் அமெரிக்காவிற்குப் பறந்தார். மகன் தனக்காக இவ்வளவு மெனெக்கிட்டதிலேயே அவருக்கு பாதி நோய் குணமடைந்து விட்டது, சீக்கிரமே தான் பூரண குணமடைந்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் விமானத்தில் ஏறினார் சங்கரமணியின் அன்னை.

(இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.) 

Sunday 4 October 2015

Going abroad on official work?

அரவிந்தனுக்கு சிறு வயது முதலே அவன் அமெரிக்க மாமா மீது கொள்ளை பிரியம். அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் ஏதேதோ கேள்விப்படாத மிட்டாய்களையும், விளையாட்டு பொருட்களையும் வாங்கி வருவார். ஊரில் அனைவரும் அவரிடம் நலன் விசாரிக்க வந்துவிடுவர். 
என்னதான் மாமாவை மிகவும் பிடித்தாலும், அவர் வந்துவிட்டால் அரவிந்தனுக்கு மவுசு குறைந்துவிடும் என்பதாலோ என்னவோ எப்படியாவது அமெரிக்கா சென்று மாமாவை விட பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். 
 
24 வயதானது, இதோ கிளம்பிவிட்டான் அமெரிக்கா! 
 
மாதம் 7000 டாலர் சம்பளம். அறுபதால் பெருக்கி ஊரெல்லாம் போஸ்டர் அடித்தாள் அரவிந்தனின் தாய். ஊரில் அரவிந்தனை பற்றிதான் பேச்சு. தன் வாழ்க்கை லட்சியம் நிறைவேறிய சந்தோஷத்தில் இருந்த அரவிந்தனை அவர் அப்பா ஒரு நாள் ஆபீஸுக்கு வரச்சொன்னார். அங்கே அவருடைய பேங்க் நண்பர் ஆனந்த் அங்கிள் இருந்தார்.
 
பல அறிவுரைகளுக்கு பிறகு, அவன் தான் சம்பாதிக்க இருக்கும் வெளிநாட்டுப் பணத்தை எப்படி சேமிப்பது, எம்மாதிரி வங்கிக்கணக்குகளை வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து கூறத்தொடங்கினார். அத்தனை நேரம் மூடி இருந்த காதுகளை சற்று திறந்துகொண்டார். 
 
வெளிநாடு செல்லும் ஒருவர் ரிசர்வ் வங்கி அனுமதி எதுவும் இல்லாமல் மூன்று பொதுவான கணக்கு வகைகள் வைத்துக் கொள்ள முடியும். 
 
• FCNR 
 
• குடியாளர் அல்லாத சாதாரண ரூபாய் கணக்கு (NRO கணக்கு)
 
• குடியாளர் அல்லாத (வெளிப்புற) ரூபாய் கணக்கு (NRE கணக்கு)
 
-  ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்,
 
FCNR கணக்குகளை 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையான நிரந்தர வைப்பு நிதியாக மட்டுமே துவங்க முடியும். வெளிநாட்டிலிருந்து வங்கிகள் மூலமாக அனுப்பும்அந்நிய செலாவணியிலேயே இக்கணக்கை வைத்துக் கொள்ளலாம். FCNR கணக்குகளிலிருந்து வரும் வட்டி வருமான வரிக்கு உட்படுத்தப்படாது. 
இங்கிருந்து வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லவும் எந்த தடையும் இல்லை. FCNR வைப்புக்கள் உள்ளூர் வைப்புகளை விட உங்கள் வெளிநாட்டு நாணயத்திலிருந்து அதிக வருமானத்தை சம்பாதிக்க சிறந்த வழியாக உள்ளது. சில வங்கிகள் வைப்புகளின் மேல் 85% வரை கடன் அளிக்க தயாராக உள்ளன. 
 
NRO கணக்கு
 
வேலை அல்லது இந்தியாவுக்கு வெளியே ஒரு தொழில் நிறுவுவதற்காக  இந்தியாவை விட்டு செல்பவர் மட்டுமே திறக்க முடியும் என்ற ஒரே வேறுபாட்டைத் தவிர ஒரு சாதாரண வங்கி கணக்கு போன்றே NRO கணக்கு செயல்படும். இந்த கணக்குகளை , வெளிநாட்டு ரூபாய் கணக்குகளிலிருந்து பணம் அனுப்பி திறக்க முடியும். இக்கணக்கு ரூபாயில் வகுக்கப்பட்டடிருக்கும். 
 
இந்தியாவில் NRO கணக்கில் அனுமதிக்கப்பட்ட வைப்புகள்:
 
NRE கணக்குகளில் இருந்து அனுப்பப்படும் பணம்.
இந்தியாவுக்கு வெளியே பெறப்படும் வருமானம்.
தற்காலிக வருகையின் போது கணக்கில் செலுத்தப்படும் பணம்.
வாடகை , ஈவுத்தொகை , ஓய்வூதியம், வட்டி போன்ற உள்ளூர் வருமானம்
சொத்துக்களை விற்று வாங்கிய தொகை
NRO கணக்கில் அனுமதிக்கப்பட்ட எடுப்புகள்:
உள்ளூர் செலவுகள்
NRE கணக்குகளில் செலுத்துவதற்காக பணம் எடுத்தல். 
 
NRE கணக்கு
 
NRE கணக்கும் கிட்டத்தட்ட NRO கணக்கைப் போலவே செயல்படும். ஒரு சில மாற்றங்கள் மட்டும் இருக்கும். அவற்றை கீழே காண்போம். 
 
1. கூட்டுக் கணக்குகள்: இரண்டு அயல்நாடு வாழ் இந்தியர்கள் சொந்தமாக ஒரு கூட்டு கணக்கை NRE அல்லது NRO கணக்கில் இயக்க முடியும். இந்தியாவில் உள்ள நெருங்கிய உறவினர்களோடு சேர்ந்து  NRO கணக்கைத் துவங்கலாம். ஆனால் NRE கணக்கில் கூட்டு உரிமையாளராக ஒரு குடியாளரை சேர்க்க முடியாது. 
 
2. வரிச்  சலுகை: NRE கணக்கிலிருந்து ஈட்டிய வட்டி இந்தியாவில் வரிக்கு உட்பட்டது இல்லை. ஆனால் NRO கணக்கில் வரும் வட்டிக்கு 30% வரியை கழித்துவிட்டு பாக்கியை மட்டுமே அளிப்பர். 
 
3. வெளிநாட்டிற்கு பணத்தை திரும்ப அனுப்புதல்: NRE கணக்குகளில் (அசல் மற்றும் வட்டி) இருந்து வெளிநாட்டிற்கு எந்த தடையும் இன்றி பணத்தை திரும்ப அனுப்பலாம். NRO கணக்கில் இருந்து அனுமதி பெற்ற பின் தான் பணம் அனுப்ப முடியும். ஒரு வருடத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகராக மட்டுமே  வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப முடியும். அதற்கும், பட்டயக் கணக்காளரிடமிருந்து வருமான வரி செலுத்திவிட்டதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.  
 
4. கடன் பெருதல் : NRO மற்றும் NRE வைப்புகளுக்கு எதிராக ரூபாய் கடன் பெறலாம். ஆனால் அந்நிய செலாவணியில் கடன் பெற NRE வைப்புகள் மட்டுமே உதவும். 
 
5. உள்நாட்டு வருமானத்தை செலுத்துதல் : NRE கணக்கில், உள்நாட்டு வருமானத்தை நேரடியாக செலுத்த முடியாது. 
 
6. வட்டி விகிதம் : NRO மற்றும் NRE வைப்புகளுக்கு, சாதாரண வைப்புகளுக்கு தரும் வட்டியை விட, வட்டி விகிதம் அதிமாகதான் உள்ளது. வட்டி வழங்குவதில் வங்கிகளுக்கு எந்த வரம்பும் அளிக்கப்படுவதில்லை.
குடும்பத்தின் நிதி தேவைகளைப் பொறுத்து எந்த கணக்கை பராமரிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவில் அவசர தேவைகள் இருந்தால், NRO கணக்கிலும், எளிதாக வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப NRE கணக்கிலும், வட்டி சம்பாதிக்க ஒரு வைப்பு வைத்துகொள்வதாக இருந்தால் FCNR கணக்கிலும் பணத்தை முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று கூறி முடித்தார். 
 
“என்னடா? எல்லா பணத்தையும் செல்போன் வாங்கியே கரியாக்க போரயா இல்ல அங்கிள் சொன்னத கொஞ்சமாவது கேட்பாயா” என்று தன் வழக்கமான சிடுசிடுப்புடன் கேட்ட அப்பாவிடம் தலையை ஆட்டி வைத்த அரவிந்தன், தன் பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதை தானும் அறிந்த மகிழ்ச்சியில் திளைத்தார். 

NRIs & Taxes

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்று வருவது என்பது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு ஒரு கனவாக மட்டுமே இருந்து வந்தது.
 
ஆனால் தற்போது கம்ப்யூட்டர் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சராசரி இந்தியர்களும் வெளிநாடு சென்று வருவதை மிகச் சாதாரணமான விஷயமாக ஆக்கிவிட்டது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வருமான வரி, அந்நிய செலாவணி குறித்த கேள்விகளும் அதிக அளவில் ஏற்படுகின்றன.
 
 
தொடரின் முதல் நாயகனான பாண்டியன், மதுரை மாவட்டம் நாச்சிக்குளம் கிராமத்தில் பிறந்து, இந்திய உணவு பழக்கத்தில் தன்னை வலுக்கட்டாயமாக  திணித்துக் கொண்ட கோலாவை தவிர வேறு எந்த வெளிநாட்டு வாடையும் இல்லாமல் வளர்ந்தார். பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்றில்லாமல் அவர் கிராமத்திலேயே முதன்முதலாக பட்டம் பெற்று, இந்தியாவின் முன்னனி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சேர்ந்து மூத்த அதிகாரியாக குறுகிய  காலத்திலேயே பதவி உயர்வு பெற்றார்.
 
தன் பணி நிமித்தம் அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா எடுக்கப்பட்ட நிலையில் குறுகிய காலத்திற்கு அவ்விடம் செல்ல தயாரானார். அவருடைய பிரம்மிப்பூட்டும் முதல் வெளிநாட்டுப் பிரயாணம், நவம்பர் 1 முதல் மார்ச் 31 வரை திட்டமிடப்பட்டிருந்தது. 
 
மீண்டும் இந்தியா வந்தவுடன், வருமான வரி தாக்கல் செய்கின்ற நேரத்தில் ஆடிட்டரை அணுகினார். ஆடிட்டர், இந்தியாவில் பெற்ற தொகை மட்டுமின்றி அமெரிக்காவில் வாங்கிய சம்பளத்தையும் வரிப்படிவத்தில் காண்பிக்க வேண்டும் என்றதும் சற்று அதிர்ந்துதான் போனார். ஆனால் அங்கே செலுத்திய வரியை இங்கே கழித்துக் கொள்ளலாம் என்பது தான் அவருக்கு  சற்று ஆறுதலைத் தந்தது.
 
பொதுவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) என்றால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றக் கருத்து நிலவுகிறது. இது பொது அளவில் உண்மையாக இருந்தாலும், சில கேள்விகளின் அடிப்படையில் தான் உண்மை நிலவரம் அறியப்படுகிறது. வெளிநாடு செல்லும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய தலையாய விஷயங்கள் என்னென்ன என்று முதலில் பார்ப்போம்.
 
ஒன்று, இந்தியாவை விட்டு வெளியே சென்ற மறு நிமிடமே ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியராக கருதப்பட மாட்டார்.  வருமான வரி சட்டம் மற்றும் FEMA  இந்தியாவை விட்டு செல்லும் ஒரு நபரின் குடியிருப்பு அந்தஸ்தை இரு வேறு முறையில் விவரித்துள்ளன. 
 
வருமான வரி சட்டத்தில் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்த்து ஒருவர் இந்தியாவில் தங்கிய நாட்களை வைத்து கணக்கிடப்படுகிறது. அதன்படி முந்தைய நிதி ஆண்டில், 
 
1) 182 க்கும் குறைவான நாட்கள். (அல்லது)
 
2) முந்தைய நிதி ஆண்டில் 60 நாட்கள் (மற்றும்) முந்தைய நான்கு நிதி ஆண்டுகளில் 365க்கும் குறைவான நாட்கள்
 
இந்தியாவில் தங்கியிருந்தால், அவர்  வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்த்தை பெறுவார். 
இதற்கான விதிவிலக்குகள், இந்திய கப்பல் குழுவில் உறுப்பினராக அல்லது வெளிநாட்டில் வேலைவாய்ப்பு காரணமாக அல்லது இந்திய வம்சாவளியினராக (PIO) இருந்தால், (2)ம் விதி,  முந்தைய நிதி ஆண்டில் 180விட குறைவாக நாட்கள் மற்றும் முந்தைய நான்கு நிதி ஆண்டுகளில் 365 நாட்களுக்கும் குறைவான நாட்கள் தங்கி இருந்தால் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்த்தை பெறுவார். 
 
அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின்(FEMA) படி, ஒரு நபர் முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவில் 183 நாட்களில் விட குறைவாக தங்கி  இருந்தால் வெளிநாடு வாழ் இந்தியர் என்றாவார்.
 
இதற்கான விதிவிலக்குகள், வெளிநாட்டில் வேலை நிமித்தமாக, வணிகம் அல்லது தொழில் துவங்க இந்தியாவுக்கு வெளியே சென்று, நிச்சயமற்ற காலம் இந்தியாவில் தங்க அவர் விருப்பத்தை குறிக்குமேயானால் அவர் இந்தியாவை விட்டு வெளிவந்த நாளிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியர் ஆகிரார். 
 
குடியாளர் அந்தஸ்த்துக்கேற்ப வரிக்கு உட்படித்தப்படும் வருமானமும் மாறுபடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் அத்தகவலை காண்க.
 
குடியாளர் அந்தஸ்த்து வரிக்கு உட்படித்தப்படும் வருமானம்    
இந்திய குடியாளர்
 
1) இந்தியாவில் ஈட்டிய வருமானம் மற்றும்
 
 2) இந்தியாவிற்கு வெளியே ஈட்டப்பட்ட அனைத்து வருமானங்களும்.    
 
வெளிநாட்டு வரிதாரர்
1) இந்தியாவில் ஈட்டிய வருமானம்
 
 2) இந்தியாவில் ஈட்டியதாக கருதப்படும் வருமானம்   
 
 1) இந்தயாவில் உள்ள வியாபாரத் தொடர்பினாலோ
 
 2) இந்தயாவில் இருக்கும் பலதரப்பட்ட சொத்துகளிலிருந்தோ
 
 3) இந்தயாவில் செய்த வேலைக்காக வாங்கிய சம்பளமாக இருந்தாலோ
அவையனைத்தும் இந்தயாவில் ஈட்டிய வருமானங்களாகக் கருதப்படும்.
 
வருமான வரிச்சட்டப்படி ஒரு இந்திய குடியாளர், தன் அனைத்து வருமானங்களுக்கும் வரி செலுத்த வேண்டும். ஆனால் அவ்வருமானம் இந்தியாவில் சம்பாதிக்காத பட்சத்தில் அதற்கான வரியை வெளிநாட்டில் செலுத்தியிருந்தால், இரட்டை வரி ஒப்பந்தத்தை கருத்தில் கொள்ள வேண்டும். 
 
இரட்டை வரி ஒப்பந்தம் என்பது ஒரே ஆண்டில் ஒரு வரிதாரர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு இரு நாடுகளில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்கான ஒன்று. எந்த நாட்டில் வரிகட்ட வேண்டும் என்பதை இரட்டை வரி ஒப்பந்தத்தை வைத்து தான் தெளிவுபெற முடியும்.  
 
இந்தியா 85க்கும் மேலாக நாடுகளோடு இரட்டை வரி ஒப்பந்தங்களை (Double Taxation Avoidance Agreements) கொண்டுள்ளது. நீங்கள் அந்த நாடுகளில் சம்பாதித்த தொகைகளுக்கு அங்கேயே வரி செலுத்த வேண்டும் என்றால், இந்தியாவில் வெளிநாட்டு வருமானத்திற்கு, வெளிநாட்டு வரி கழிப்பைப் (Foreign Tax credit) பயன்படுத்தலாம்.
 
இதில் ஆராய வேண்டிய விஷயம், பாண்டியன் தொழில் சம்மந்தமாக வெளிநாடு சென்றுள்ளார், எனவே 182 நாட்களுக்கு மேலாக அவர் இந்தியாவில் இருந்துள்ளதால், அவர் வரி தாக்கலுக்காக இந்திய குடியாளராகவே கருதப்படுவார். 
(தொடரும்)

Capital Gains & NRIs - continued

5. மூலதன ஆதாய வரிக் குறைப்பு..!

ஆடிட்டர். G. கார்த்திகேயன், கோவை
துபாய் சுந்தரேசன் தனது மதுரை பூர்வீக வீட்டை மனைவி அபிதாவைத் திருப்திப்படுத்த விற்கத் திட்டமிட்டதையும், இந்த விற்பனையின் மூலம் ஏற்படும் மூலதன ஆதாயம் கணக்கிடப்படும் முறையையும் கடந்த வாரம் பார்த்தோம்.

மூலதன ஆதாயம் (Capital Gain) என்பது ஒரு சொத்தை விற்பதன் மூலம் ஏற்படும் லாபம். விற்ற விலைக்கும் வாங்கிய விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கணக்கிடும் முறையை மீண்டும் ஒரு முறை காண்போம்
நமது உதாரணத்தின்படி  

விற்ற விலை                                           1,50,00,000
கழிவுபரிமாற்றச் செலவு                      (12,00,000)
 வாங்கிய விலை                                      (51,20,000)
 மேம்பாட்டு செலவுகள்                            (3,50,000)
                                                                                  _________
 மூலதன லாபம்                                         83,30,000
                              ___________
முன்பே கூறியவாறு நீண்ட கால மூலதன லாபமாக இருக்கும்பட்சத்தில் 20% வரி செலுத்தவேண்டும்சுந்தரேசனின் ஆடிட்டர் அவ்வளவு வரியை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி கூறுகிறார்.
வரியைக் குறைக்கும் முறைகள்:
நீங்கள் மூலதன ஆதாயத்திற்கு விலக்கு கோர வருமானவரி சட்டத்தில் பல்வேறு விதிகள் உள்ளனவீட்டுச்சொத்து விற்பனை மூலம் மூலம் ஏற்படும் லாபத்தை சமாளிக்கும் விதிகளை இந்த கட்டுரையில் பார்போம். 
அடிப்படையில்வருமான வரி சட்டத்தில் குடியிருப்புசொத்து விற்பனை தொடர்பாக 2 விதிகள் உள்ளன.


                                      ஆடிட்டர். G. கார்த்திகேயன், கோவை

ஒன்றுநீங்கள் ஒரு குடியிருப்பு சொத்தை விற்று மற்றொரு குடியிருப்பு சொத்தை வாங்கும்போது இந்தச்சட்டப் பிரிவு பொருந்தும்இரண்டாவது
நீங்கள் குடியிருப்பு சொத்து அல்லாத நீண்ட கால சொத்தை விற்று ஒரு குடியிருப்பு சொத்தைவாங்கும்போது பொருந்தும்.

முதல் விதி : ஒரு குடியிருப்பு சொத்து விற்கப்பட்டு மற்றொரு குடியிருப்பு சொத்து வாங்கும் அல்லது கட்டும் போது. 
இந்த நிலைக்கு தொடர்புடைய 54ம் பிரிவில்விற்கப்பட்ட குடியிருப்பு ஒரு நீண்ட கால மூலதனசொத்தாக இருக்க வேண்டும். (அதாவது 3 ஆண்டுகளுக்கு மேல்) 
சொத்து விற்ற பின்னர்வரி செலுத்துபவர் விற்ற தேதிக்கு  ஒரு வருடத்திற்கு முன் அல்லது விற்றதேதிக்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு புதிய வீட்டை வாங்க வேண்டும். (அல்லதுவரிசெலுத்துபவர் மூன்று ஆண்டுகளுக்குள் புது வீட்டை கட்டி முடிக்க வேண்டும். 
இந்த விதியில் விலக்களிக்கப்பட்ட மூலதன ஆதாயத்தின் அளவு :  
1)  புதிய சொத்தின் விலை
2) மூலதன ஆதாயம் 
இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதனை கழித்துக் கொள்ளலாம்.  
ஒரு உதாரணத்திற்கு , சுந்தரேசன் விற்பனை தேதிக்கு ஒரு ஆண்டிற்கு முன் இந்தியாவில் ரூ.30லட்சத்திற்கு ஒரு புதிய வீட்டை வாங்கினார் என்று கருதிக் கொள்வோம்உதாரணத்தின்படிமூலதன ஆதாயம் ரூ.83.3 லட்சம்இந்த நிலையில் விலக்களிக்கப்பட்ட ஆதாயத்தின் அளவைக் கீழே காண்போம். 
மூலதன ஆதாயம்                                        ரூ.83.3 லட்சம்
கழிப்பு : புதிய வீட்டின் விலை    ரூ.30 லட்சம்
 விலக்களிக்கப்பட்ட ஆதாயம்     ரூ.30 லட்சம்
வரிக்குட்படுத்தப்படும் ஆதாயம்  ரூ.53.30 லட்சம்
எனவேசுந்தரேசன் ரூ..53.3 லட்சத்திற்கு 20% வரி செலுத்தினால் போதுமானது.  
இப்போது அதே நிலைமையை கருத்தில் கொள்வோம். ஆனால் வாங்கிய சொத்தின் மதிப்பு ரூ.1கோடி இந்த நிலையில் விலக்களிக்கப்பட்ட ஆதாயத்தின் அளவைக் கீழே காண்போம்.
மூலதன ஆதாயம்                                        ரூ.83.3 லட்சம்
கழிப்பு : புதிய வீட்டின் விலை    ரூ.1 கோடி
 விலக்களிக்கப்பட்ட ஆதாயம்     ரூ.83.3 லட்சம்
வரிக்குட்படுத்தப்படும் ஆதாயம்  ரூ.0
இதனில் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விதிநீங்கள் பாக்கி இருக்கும் செலவிற்குவரிப் படிவத்தில் கழிப்போ அல்லது இழப்போ கோர முடியாது. 
இரண்டாவது விதி : ஒரு குடியிருப்பு அல்லாத நீண்ட கால சொத்தை  (உதாரணத்துக்கு வீட்டு மனை, விவசாய நிலம்) விற்று ஒரு புதிய வீட்டைக் வாங்குவது அல்லது கட்டுவது.  
இந்த சூழ்நிலையிக்கு தொடர்புடையது 54F பிரிவு. 54F  பிரிவின்படிவிற்ற சொத்து ஒரு குடியிருப்புஅல்லாத நீண்ட கால மூலதன சொத்தாக இருக்க வேண்டும். 
சொத்து விற்ற பின்னர்வரி செலுத்துபவர் விற்பனைக்கு ஒரு வருடத்திற்கு முன் அல்லதுவிற்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஒரு புதிய வீட்டை வாங்க வேண்டும். (அல்லதுவரிசெலுத்துபவர் மூன்று ஆண்டுகளுக்குள் சொத்துரிமை பெற்று புது வீட்டை கட்டி முடிக்க வேண்டும். 
இந்த விதியின் மிக முக்கியமான பகுதிவரி செலுத்துபவர் வாங்கிய அல்லது கட்டிய புதிய சொத்துதவிர அவரது பெயரில் வேறு எந்த வீடும் இருக்கக் கூடாது என்பதுதான். 
இதற்கு மேல், இந்த திட்டங்களின் கீழ் வாங்கிய எந்த சொத்தையும் வாங்கும் தேதியிலிருந்து 3ஆண்டுகள் நிறைவடையும் முன் விற்கக் கூடாது.  
மேலும் விற்றத் தொகையை ஒரு வங்கி கணக்கில் ஆதாய லாப தனிக் கணக்கில் டெபாசிட் செய்துஅதிலிருந்து தான் வீடு கட்ட மற்றும் வாங்க வேண்டும் என்பதும் ஒரு விதி முறை.
ஆகவே பல வகைகளில் மூலதன ஆதாய லாபத்தை குறைக்க வழி உள்ளது என்பதை அனைவரும்அறிந்து கொள்ள வேண்டும்.