Sunday 4 October 2015

Is a gift received from an NRI taxable?

ராமநாதபுரத்தில் “லெதர் ஹமீது என்றால் மிகவும் பிரபலம்.தன் தாத்தா காலத்து தோல் தொழிற்சாலையை பாதுகாத்து லாபகரமாக நடத்தி வரும் சாகுல் ஹமீது சில ஆண்டுகளுக்கு முன் தனது மகள் பர்வீனைக்குவைத் மாப்பிள்ளைக்கு விமர்சையாக ண முடித்து வைத்தார்எம்பிஏ படித்த கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதை வீணாக்க விரும்பாமல் தன் கணவரின் லாபகரமான ட்ரேடிங் நிறுவனத்தில் திருமணத்திற்கு பிறகுமுழு நேரப் பங்குதாரராக இருந்து நல்ல வருமானத்தை சம்பாதித்து வருகிறார் பர்வீன்.வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்தியாவுக்கு வந்து செல்லும் பர்வீன் அப்பாவிடம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும்படி அடிக்கடி கூறி வந்தார்கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ரூகோடி வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என தோன்றியதுஎப்போதும் கடன் வாங்க விருப்பம் இல்லாத சாகுல் ஹமீது அதைப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் சமீபகாலமாக தன் லெதர் கம்பெனி சுமாரான லாபம் மட்டுமே ஈட்டி வருவதால் வேறு என்ன செய்வது என்று அசைபோட்டுக் கொண்டிருந்தார்மகள் கூறுவது போன்று அவளது வியாபாரத்தை அபிவிருத்தி செய்யலாம் என்ற ஆசை தனக்கும் இருப்பதை மனைவியிடம் கூறி வந்தார்.

வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் அளவுக்கு தன்னிடம் முதலீட்டு பணம் இருக்குமா என்று பல வகையில் யோசித்தார்வழக்கம் போல் வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஒப்பிக்கும் போக்கில் இதை மகளின் காதில் போட்டு வைத்தார் ஹமீதின் மனைவி சுலைஹா.

அப்பாவிடம் ரூகோடி மட்டுமே இருத்தது என்றதும் நான் மிச்ச தொகையை வெகுமதியாகக்((Gift) கொடுக்கிறேன்நீங்கள் அதை வைத்து வியாபாரத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று கூறினாள்வெகுமதி வாங்கலாமாஅதற்கு வரிகட்ட வேண்டுமாஅதற்கு வரையறை ஏதும் உள்ளதாபோன்ற சந்தேகங்களும் குழப்பங்களும் சாகுல் ஹமீதுக்கு ஏற்பட்டதுஇது குறித்தசட்ட பிரிவுகளை குறித்து விபரம் சேகரிக்க துவங்கினார்.

வெகுமதி என்றால் என்ன என்பதை முதலில் காண்போம்:

ஒரு தனி நபர்நடப்பாண்டில் உறவினர்கள் அல்லாத வேறு யாரேனும் ஒருவரிடமிருந்து ரூ.50,000-த்திற்கு மேல் ரொக்கமாகவோ அல்லது ரூ.50,000-த்திற்கு அதிகமான மதிப்புடைய ஏதேனும் அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை வெகுமதியாகப் பெற்றிருப்பாரயின் சட்டப்பிரிவு 56ன் படி அது வருமானமாகக் கருதப்படும்.

ஒருவேளை இம்மதிப்பு ரூ.50,000த்திற்குள் இருந்தால் அது வருமானமாகக் கருதப்படாதுஇது அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வங்கி மூலமாக வரும் தொகைகளுக்கும் பொருந்தும்.

உதாரணமாகசாகுல் ஹமீது அவருடைய நண்பரிடமிருந்து ரூ.30,000 மட்டும் வெகுமதியாக வாங்கினால் இது வருமானமாக எடுத்துக் கொள்ள முடியாதுஇதுவே அவர் ரூ.1,50,000வெகுமதியாக பெற்றிருக்கிறார் எனில்மீதமுள்ள ரூ.1,00,000 வருமானமாக கருதப்படும்.

திருணத்தின் போது கிடைக்கும் வெகுமதி ரூ.50,000 த்திற்கு மேல் இருந்தாலும் இது வரிக்குட்படுத்துவது இல்லைஎனினும்நிச்சயதார்த்த்திற்கு உறவினர்கள் அல்லாத வேறு யாரேனும் ஒருவரிடமிருந்து ரூ.50,000-த்திற்கு மேல் ரொக்கமாகவோ அல்லது ரூ.50,000-த்திற்கு அதிகமான மதிப்புடைய ஏதேனும் அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை வெகுமதியாகப் பெற்றிருப்பாராயின் அது வருமானமாக்க் கருதப்படும்.

உயில் மூலமாகவோ அல்லது வாரிசு சொத்தாகவோ பெறுவது போன்றவையும் ரூ.50,000 த்திற்கு மேல் இருந்தாலும் அதற்கு வரிக்கட்ட தேவையில்லை.

இந்த சட்டத்தில் முக்கியமாக பார்க்க வேண்டிய பிரிவுஉறவினர்களிடமிருந்து வாங்கும் வெகுமதிக்கு வரிக்கட்ட தேவையில்லை.
வருமான வரி சட்டத்தின் படி உங்கள் உறவினர்கள் என்று கருதப்படுவோர்
  • தம் கணவன் அல்லது மனைவி
  • சொந்த சகோதரர் அல்லது சகோதரி
  • மனைவியின் சொந்த சகோதரர் அல்லது சகோதரி
  • பெற்றோர்களின்சொந்த சகோதரர் அல்லது சகோதரி
  • தனிப்பட்ட அல்லது மனைவியின் நேரடியான முன்னோர்கள் அல்லது சந்ததியர்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உறவினர்களிடமிருந்து எவ்வளவு மதிப்புள்ள ரொக்கமோபொருளோ பெற்றாலும் அது வருமானமாகக் கருதப்படாதுமகளிடம் வெகுமதி பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அறிந்ததும் தன் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய ஆயத்தமானார்எதற்கும் மாப்பிள்ளையிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள் என்று மனைவி கூறியதற்கு மறுப்பு தெரிவிக்காமல்அவரிடம் பேசினார்உங்களுகில்லாமலாதாராளமாக தரலாம் என்று மாப்பிள்ளை தலை அசைக்கவேமுழு உற்சாகத்தோடு வேலையில் இறங்கினார் “லெதர் ஹமீது.

No comments:

Post a Comment